காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .
கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதாவது கடவுளின் அருளால் படத்தின் செக்கன்ட் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.அதனுடன் படத்தின் அப்டேட் ஒன்று காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாகவும்,அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
unknown node