நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் நேரடியாக OTT-யில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம், முழுக்க முழுக்க அதிடி ஆக்சன் நிறைந்த திரில்லர் காட்சிகளாக உருவாகியுள்ளது. ஆனால் இப்படம் திரையரங்கில் வரும் என விக்ரம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.
இதையும் படியுங்களேன்-I’m not a monter.. லூசிபராக களமிறங்கும் மோகன்லாலின் அதிரடி மாஸ் டிரைலர்.!
அண்மையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் னால வரவேற்பை பெற்றது. அண்மையில் ஒரு பேட்டியில் விக்ரம் பேசுகையில், தாங்கள் நடித்த “மகான்” படத்தை தியேட்டரில் ஸ்பெஷல் ஷோவாக விக்ரம் மற்றும் அவரது மகனும், மகான் படக்குழுவினரும் சென்று பார்த்துள்ளனர். அதனை பார்த்த விக்ரம் மகன் துருவ் படத்தின் இடைவெளியின் போது விக்ரமிடம் வருத்தப்பட்டாராம்.
unknown nodeஅதாவது, இந்த படம் தியேட்டரில்வெளிட்டுருந்தால் ரசிகர்கள் சந்தோசமாக கொண்டாடி இருந்திருப்பாங்க. ஆனால், இப்படம் அதனை பூர்த்தி செய்யவில்லை என்று கவலை பட்டாராம்.


