பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாரா நடிகை இந்தரஜா.?அவரே கூறிய பதில்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிகில் பட நடிகை இந்தரஜா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிகில் பட நடிகை இந்தரஜா தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . அதனையடுத்து பிக்பாஸ் வீடு சண்டை சச்சரவுகளில் இருந்து வரும் நிலையில் மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்தான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகளும்,பிகில் பட நடிகையுமான இந்தரஜா அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர் சமீப நாட்களாக வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ஹோட்டலில் இருப்பது போன்று தெரிந்தாலும், எனவே அவர் பிக்பாஸ் வீட்டில் செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இதற்கு பதிலளித்த இந்திரஜா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக வெளியான செய்தி அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.