இளையராஜா மகள் மறைவு: இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

Ilayaraja's concert cancelled

மகள் பவதாரிணியின் மறைவைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சுகதத்தாச் உள் அரங்கில் நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பவதாரிணி நேற்று திடீரென உயிரிழந்ததால், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ilayaraja
ilayaraja [FILE IMAGE]
தற்பொழுது, பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக  இளையராஜா இல்லத்தில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்