என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் : நடிகை அமலாபால்

Default Image

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் நடிகை அமலாபால் ஆடையில்லாமல் நடித்துள்ளார். இதனையடுத்து இப்படம் வெளியாவதில் பல சிக்கல் இருந்தாலும், தடைகளை தாண்டி இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இப்படத்திற்கு வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நடிகை அமலாபால் இப்படம் குறித்து அளித்த பேட்டியில், ‘இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என்று அமலாபால் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்