அதிகமாக பீர் அடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் -ராதிகா ஆப்தே

Default Image

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா ,தோனி ஆகிய திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் நீங்க இடம் பெற்றார்.
மேலும் தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார்.தற்போது இரண்டு  ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் சினிமா அனுபவங்களை பற்றி கேட்டபோது அதிகமாக பீர் அடித்ததால் ஒரு  படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என கூறினர்.
இதை பற்றி அவர் கூறுகையில் , இயக்குனர் ஆயுஷ்மன் இயக்கத்தில் “விக்கி டோனர்”என்ற இந்தி திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக  நான் தான் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். படப்பிடிப்புக்கு  ஒரு மாதத்திற்கு முன் நான் விடுமுறைக்காக வெளிநாடு சென்று இருந்தேன்.
அப்போது அங்கு அதிகமாக பீர் அடித்து, அதிகமாக சாப்பிட்டதாலும் எனது உடல் எடை அதிகரித்து விட்டது. அப்போது என்  உடல் எடையை பார்த்த இயக்குனர் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கினார்.அதன் பிறகு உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருப்பதாக ராதிகா ஆப்தே கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்