நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது! பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் அதிரடி!

Default Image

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது வடிவழகியும் கூட. இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது வியூவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மீரா மிதுன் மீது, ஜோ மைக்கேல் என்பவர், சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தான் கூலிப்படையை ஏவி யாரையும் கொலை செய்ய முயலவில்லை. கோபத்தில் மேலாளருடன் பேசியதை திரித்து இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜோ மைக்கேல் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், செல்போனை ஹேக் செய்து ஜோ மைக்கேல் தகவல்களை திருடியுள்ளார் என்றும், நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது என்றும் மீரா மிதுன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்