“சேர்ந்து வாழ எண்ணம் இல்லை”..நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

சென்னை குடும்ப நல நீதிமன்றம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.

Dhanush and AishwaryaRajinikanth

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.  2022 இல்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த அந்த  மனுவானது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டடு இருந்தாலும், இந்த வழக்கில் இருவரும் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகமல் இருந்தனர்.   இதனால், இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர். மேலும், அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதாக நம்பப்பட்டது எனவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தது.

ஆனால், இவர்களுடைய விவாகரத்து வழக்கு நவம்பர் 21-ஆம் தேதி சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடைபெற்றபோது இருவரும் நேரில் ஆஜரானார்கள்.  விசாரணயில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்ந்து வாழ எண்ணம் இல்லை என்பது போல விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இதற்கான இறுதித்தீர்ப்பு  நவம்பர் 27 அன்று வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதன்படி , இன்று இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நவ.18ம் தேதி 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்து உத்தரவிட்டு விவாகரத்து வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman
Telangana Govt Inner Reservation