“என்ன ஆச்சுன்னே தெரியல”….ஸ்டார் படம் குறித்து வேதனைப்பட்ட ஹரிஷ் கல்யாண்!

ஸ்டார் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் பற்றி நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

harish kalyan about star

சென்னை : கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் முதன் முதலாக ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கவிருந்தார்.படத்தில் அவர் நடிக்கவுள்ள லுக்கிற்கான போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடபட்டிருந்தது. ஆனால், திடீரென ஹரிஷ் கல்யாணுக்கு பதில் அந்த படத்தில் கவின் நடிக்கிறார் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

கவின் நடிக்கிறார் என்றவுடன் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமானது என்று கூட சொல்லலாம். படமும் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. இருப்பினும், இந்த படத்தில் இருந்து என்ன காரணத்துக்காக ஹரிஷ் விளக்கினார் என்ற காரணம் பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்தது. பல பேட்டிகளில் அதனை பற்றி கேள்விகள் வந்தாலும் அவர் அதற்கு பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில், சமீபத்தில் ரப்பர் பந்து படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்டார் படம் பற்றி வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது “ஸ்டார் படத்தில் எனக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்தது. ஆனால், எனக்கு தெரியாமல் சில விஷயங்கள் நடந்தது.

படம் என்னை வைத்து ஆரம்பித்தார்கள். ஆனால், எனக்கு தெரியாமலே அந்த படம் என்னை விட்டு போனது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த படத்தை எனக்கு பதில் வேறொரு ஹீரோவை வைத்து எடுக்கிறார்கள் என்ற தகவலை கூட என்னிடம் சொல்லவில்லை. என்ன நடந்தது என கூட எனக்கு தெரியவில்லை” எனவும் வருத்தத்துடன் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் “என்னைப்பொறுத்தவரை வேலை என்பதை கடந்து மனித உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு அளிப்பதை முக்கியமானதாக பார்க்கிறேன். வேலை முக்கியம் தான், அதற்காக மட்டும் பொய்யாக ஒருவரிடம் பழக முடியாது அதனை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்