இந்த மகா மனிதனின் மனிதநேயத்தின் முன்னால் தலை வணங்குகிறேன் -நடிகர் விவேக்

விஜய்காந்த் குறித்து, தான் ட்வீட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்த நடிகர் விவேக்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பணியில் ஈடுபடும் போது இவர்களில் சிலர் தங்கள் உயிரையே தியாகம் செய்ய நேரிடுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், தாக்குதலும் எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் கொரோனா வைரஸால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘what a great human being இந்த மகா மனிதனின் மனிதநேயத்தின் முன்னால் தலை வணங்குகிறேன்’ என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025