நான் அந்த மாதிரி ஆள் இல்ல! தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்?

dhanush and sivakarthikeyan

சென்னை : பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி தான் தற்போது சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா (ஆக-13) சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள காரணத்தால் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ” நான் வந்து யாரையும் கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன்…இவுங்கள நான் தான் ரெடி பண்ணேன் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டார்கள்.

நான் தான் வாழ்கை கொடுத்தேன் என்று சொல்லும் ஆள் நான் கிடையாது. என்னை பொறுத்தவரை என் நண்பர்களைப் போல அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவ்வளவுதான்” என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயன் மறைமுகமாக தனுஷை டார்கெட் செய்து தான் பேசி இருக்கிறார் என கூற, அதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட தொடங்கிவிட்டார்கள்.

தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட, சிவகார்த்திகேயன் தனுஷுக்கு தான் சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்திருக்கிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு வருகிறார்கள். மேலும், சிவகார்த்திகேயனின் ஆரம்ப சினிமா வளர்ச்சியில் தனுஷிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மறுக்க முடியாத ஒரு உண்மை தான்.

ஏனென்றால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு ‘எதிர்நீச்சல்’  படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அந்த படத்தை தயாரித்து கொடுத்தார். சிவகார்த்திகேயன் இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கூட எதிர்நீச்சல் படம் தான் அவருடைய மார்கெட் வளர பெரிய உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்