நான் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை! இயக்குனர் சேரனின் ட்வீட்!

Default Image

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகருமாவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்துமுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சேரன் அவர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் வெளியேற்றப்பட்டது, பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சேரன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan
csk ms dhoni and ambati rayudu
Vikram
Minister Nehru