மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன்.! அதிர்ச்சி செயலால் நெகிழ்ச்சியான பார்த்திபன்.!

Default Image

ஒரு காலத்தில் தமிழில் பல டாப் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், 23-ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் இயக்குனர் பார்த்திபனிடம் கடனாக 15,000ரூபாய் வாங்கி இருந்தாராம். அந்த கடனை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து கொடுத்துள்ளார். கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பார்த்திபனிடம்  ” ஏதுன்னு கேக்காம, எதையும் எதிர்பாக்காம 15,000 ரூபாய் கொடுத்து எனக்கு உதவி செய்தீர்கள்.

இதையும் படியுங்களேன்- கவர்ச்சியில் அந்த இடத்தை காட்டு காட்டு என காட்டிய ஆத்மிகா.! ரசிகர்களை மிரள வைத்த நச் க்ளிக்ஸ்.!

அந்த பணத்தை திரும்ப கொடுக்கலாம் என்று வந்தேன் என” மும்தாஜ் கூறியுள்ளார். இதனால் ஷாக்கான பார்த்திபன் ” நான் கொடுத்ததே மறந்துவிட்டேன் நீங்கள் நியாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மும்தாஜ் ” செஞ்ச நல்லதையே மறந்திட்ட நீங்க எவ்வளவு பெரிய நல்லவர்” என்று கூறிவிட்டு பணத்தை திருப்பிக்கொடுத்து நன்றி என்று தெரிவித்து சென்றுள்ளாராம்.

இதனால் நெகிழ்ந்துபோன இயக்குனர் பார்த்திபன் ட்வீட்டர் பக்கத்தில் “மும்தாஜின் அந்த நன்றி குணத்திற்கு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்து இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்