தெலுங்கு சினிமாவை உலகத்தரத்தில் உலக சினிமா ரசிகர்களையே எதிர்பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ஒற்றை கேள்வி மூலம் உலக சினிமா ரசிகர்களை தனது ஒற்றை படத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்து, எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்களை திருப்திபடுத்தினார்.
unknown node18 வருடங்களில் இதுவரை 11 வெற்றிப்படங்கள், விக்ரமார்குடு ( தமிழில் சிறுத்தை எனும் பெயரில் ரீமேக் ஆனது ), எமதொங்கா, மகதீரா ( தமிழில் மாவீரன்), மரியாத ராமண்ணா ( தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது ) ஈகா ( தமிழில் நான் ஈ ). பாகுபலி 1 & 2 என பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு படத்திலும் பூர்த்தி செய்து வருகிறார்.இந்த சரித்திர பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 46ஆவது வயதை கேட்கிறார். இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.