நடிகை அதிதி ராவ் கடைசியாக தமிழில் ஹாய் சினாமிகா திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக, காந்தி டாக்கீஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeHappy Birthday Aditi Rao Hydari [Image Source: Twitter ]
இதற்கிடையில், நேற்று முனித்தினம் இவர் தனது 36-வந்து பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், அதிதியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தது.
unknown nodeSiddharth Calls AditiRaoHydari ‘princess of heart’ [Image Source: Twitter ]
பிறகு அதிதிராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் சித்தார்த் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியீட்டு இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து என பதிவிட்டிருந்தது. இருவரும் காதலிப்பதாக பரவும் தகவல் உண்மை என பரப்பரப்பான செய்திகளும் கிளம்பு தொடங்கியது.
unknown nodeHappy Birthday Aditi Rao Hydari [Image Source: Twitter ]
இதற்கிடையில், அதிதி ராவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பாத்ரூமில் கதறி அழுததாக பேசியிருப்பது மற்றோரு பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆம், நடிகை அதிதி ராவ் நடிக்க வருவதற்கு முன் பல அவமானங்களை சந்தித்துள்ளதாக சமீபத்திய தெரிவித்துள்ளார். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நாடு முழுவதும் அரங்கேற்றம் நடத்தியதாகவும் அப்போதுதான் சாரதா என்ற தமிழ் இயக்குநர் தனக்கு சிருங்காரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் அந்தப் படம் வெளியாக தாமதமானதால் பாத்ரூமில் போய் அழுதுள்ளதாகவும் பேசியுள்ளார் நடிகை அதிதி ராவ்.