நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவது வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கும் ஒரு திரைப்படம் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் முதலில் பாலா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. வாடிவாசல் படம் மிகப்பெரியது என்பதால் அதற்கு முன்பு பாலா இயக்கும் படத்தில் நடித்துமுடித்து விட்டு வாடிவாசல் படத்தில் இணைவார்.
unknown nodeஇந்நிலையில். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 13-ஆம் தேதி மதுரையில் வைத்து தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவும் இயக்குனர் பாலாவும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.
unknown nodeஇதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் நடிகர் 2006 இல் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக தனது மனைவி ஜோதிகாவுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது உற்சாகத்தாக அளித்துள்ளது.