விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’.அதனை சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்த படத்தினை வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது கோடியில் ஒருவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியள்ளனர் .
unknown node