‘ஆபாசம்’ படப்பிடிப்பில் துன்புறுத்தல்.. நடிகர் அலென்சியர் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூருவில் 'ஆபாசம்' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இளம் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

Actor Alencier

கேரளா : ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள பட உலகம் கதிகலங்கி நிற்கிறது. நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பகிர்ந்து வருகிறார்கள். இதில் பிரபல மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் தற்பொழுது, மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ் சிக்கியுள்ளார். இளம் நடிகை ஒருவரின் புகாரின் பேரில், நடிகர் அலென்சியர் லே லோபஸ் மீது, எர்ணாகுளத்தில் உள்ள செங்கமாநாடு போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் 2017-ல் பெங்களூருவில் ‘ஆபாசம்’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது. 2018 இல் அலென்சியர் மீது இதேபோன்ற பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அந்த இளம் நடிகை .

இது தொடர்பாக, காவல்துறையில் அந்த இளம் நடிகை அளித்த புகாரில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் எடவேல பாபுவிடம் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் அவர் அந்த புகாரை புறக்கணித்தாக கூறியுள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார்களுடன் வந்ததை அடுத்து, மலையாள திரையுலகில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீஸார் பதிவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்