என்னைக்குமே நான் மிஸ்யூஸ் பண்ணுனது இல்ல! கண்ணீரோடு முகன்!

Default Image

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது  இந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, சரவணன், ரேஷ்மா, மீராமீதுன், சாக்ஷி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடே கலவரமாக தான் உள்ளது. இவர் வந்தவுடனே, முகன் மற்றும் அபிராமிக்கு இடையேயான காதலில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கடைசியில், மாறி மாறி அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்றது. இதனையடுத்து, மதுமிதா ஆண்கள் பெண்களை மிஸ்யூஸ் பண்ணுவதாக கூறி வாக்குவாதம் பண்ணினார்.

இந்நிலையில், கலங்கிய கண்களுடன் அபிராமியுடன் பேசுகிறார். என்னால ஒரு பெண்ணுக்கு பிரச்னை வரக்கூடாது என நினைக்கிறவன் தான் நான். நேற்று மது பெண்களை மிஸ்யூஸ் பண்ணுவதா சொல்ராங்க. நான் தினமும் வலியோட தான் இருக்கிறேன், ஆனா, நான் யாருகிட்டயும் அத காமிக்கிறது இல்ல.

நான் சாத்தியமா சொல்றேன் உன் ஃபிரஷிப்பை என்னைக்குமே மிஸ்யூஸ் பண்ணுனது இல்ல. உன்ன நான் உண்மையிலேயே மதிக்கிறேன் என கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong