இந்த வீட்டுலயே தனக்கு பிரியங்காவை தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் கண்ணீருடன் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்பொழுது ஆறாவது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா உடல்நல குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில், 17 போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
நேற்று கமல் சார் கலந்துகொண்ட நிகழ்வில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்போதும் இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் அபிஷேக் இந்த வீட்டிலேயே தனக்கு பிரியங்காவை தான் அதிகம் பிடிக்கும் எனவும், அதற்கு மேல் பேசினால் கலங்கி விடுவேன் எனவும் கூறியுள்ளார்.
அவரது அக்காவை தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அவரது அக்கா திருமணமாகி செல்லும் பொழுது மிகவும் அழுததாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பிரியங்கா அழாதே என்று கூறுகிறார். இதோ அந்த முதல் புரோமோ விடியோ,
unknown node