மீண்டும் தமிழ் புத்தாண்டை குறி வைத்த பீஸ்ட் நெல்சன்.!

Default Image

நடிகர் ரஜினி அடுத்தாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை.

இதனால் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி , நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் 169-வது படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாம். அதைபோல் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியீட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நெல்சன் விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் படமும் ஏப்ரல் 14-ஆம் தேதி தான் வெளியாகவிருந்தது. ஆனால் கேஜிஎப் படம் வெளியானதால், பீஸ்ட் அதற்கு முன்தினம் 13-ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்