தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

dhanush and gv prakash kumar

Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை.

இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு கொள்வார்களாம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.

இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பயங்கரமாக சண்டைபோட்டார்கள். ஒரு 6 வருடங்களுக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த பிறகு தான் பேசிக்கொள்ளவே தொடங்கினார்கள். அதுவும் ரொம்ப எல்லாம் பேசமாட்டார்கள். படம் பற்றி மட்டும் தன பேசுவார்கள்.

படம் இணைவதற்கு முன்பு வரை ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்தார்கள். இதனை ஜிவி பிரகாஷ் தான் கூறியுள்ளார். நானாக எதுவும் சொல்லவில்லை” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் பல மேடைகளில் தனுஷ் தான் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நண்பர்களுக்குள் சண்டை வருவது போல எங்களுக்கும் அடிக்கடி வரும் உடனே நாங்கள் பேசிவிடுவோம் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்