‘ஆர்யா திருப்பி அடிச்சாரே’: மறந்து போச்சா ரஞ்சித்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி?

blue sattai maran ABOUT pa.ranjith

சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா படம் மக்களுக்கு பிடித்து என ப்ளூ சட்டை கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் பேச்சு

இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாழை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது “மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல படம். அப்போ கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் எல்லாம் என்ன மொக்க படமா ?

கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் ஏன் பிடிக்கவில்லை என்றால் அந்த படங்களில் ஹீரோ  திருப்பி அடிக்கிறான் என்பதற்க்காக தான்” என கோபத்துடன் பேசினார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் என்பது போல அவர் பேச்சுக்கு எதிராக கண்டனங்களையும் எழும்பியது. மற்றோரு பக்கம் அவர் சரியாக தான் சொல்கிறார் எனவும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் எழுந்தது.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி?

பா.ரஞ்சித் மேடையில் பேசியதை வைத்து அவருக்கு கேள்வி எழுப்பும் விதமாக இயக்குனரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடிச்சாங்க. அதான் உங்களுக்கு பிடிக்கல – பா.ரஞ்சித். இவங்களை விட.. ஆக்ரோசமா பாக்சிங் சண்டைல ஆர்யா திருப்பி அடிச்சாரே!! அந்த படத்தை எல்லாரும் பாராட்டுனாங்களே… அது மறந்து போச்சா ரஞ்சித்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்