இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கோரிக்கை விடுத்த நடிகை ஜோதிகா!

Default Image

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சூர்யாவின் மனைவியாவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

இதனையடுத்து, தற்போது இவரது நடிப்பில் ஜாக்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஹீரோயின்களின் படங்களையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்றும், பெண்களின் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கதாநாயகர்களின் படத்தினை போல தனது படமும் 100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது அவரது ஆசை என ஜோதிகா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்