நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!

Mehaboob Basha

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில ஆண்டுகளாக மாபுப் பாஷா உடல் நிலை சரியில்லாமல் செங்கல்பட்டு மாவட்ட்டத்தில் தனது மற்றோரு மகன் (நாசரின் சகோதரர்) வீட்டில் இருந்த நிலையில்  இன்று உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நாசரின் தந்தை காலமானார்.

நாசர் முன்னனணி நடிகராக வளர்ந்து வருவதற்கு முன்பு அவருடைய தந்தை மாபுப் பாஷா செங்கல் பட்டில் தன்னிடம் வரும் பழைய நகைகளை பாலிஷ் போட்டுக்கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து தான் தன்னுடைய குடும்பத்தை கவனித்தாராம்.

நாசர் சிறிய வயதில் இருந்த போதே அவர் ஒரு நடிகராக ஆகவேண்டும் என்று தான் அவருடைய தந்தை விரும்பினாராம். தந்தையின் ஆசைக்காகவே, நாசர் நடிப்பு பயிற்சிக்காக கூத்து பட்டறையில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டாராம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்க அடுத்ததாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னனணி நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

தந்தையின் ஆசைக்காக நடிகராக வளர்ந்து நாசர் தன்னுடைய தந்தைக்கு பெருமையும் சேர்த்து கொடுத்துவிட்டார். தந்தை மாபுப் பாஷா காலமானதால் நாசர் மற்றும் அவருடைய குடும்பம் கண்ணீரில் மூழ்கி போய் இருக்கிறார்கள். மாபுப் பாஷா மறைவுக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்துவிட்டு நாசருக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்