நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள சர்தார் படத்திலும் நடிக்கவுள்ளார்.
unknown node