இன்று முதல் மும்பையில் வணிக வளாகங்கள் செயல்பட விதிமுறை தளர்வு!

Default Image

மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி மும்பையில் கடைகள் இரவு பத்துமணி வரையும், உணவகங்கள் இரவு 12:30 மணி வரையும் திறந்திருக்க அனுமதி இருந்தது. இரவிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இரவில் பயணம் மேற்கொள்வோரின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைகள், வணிக நிறுவனங்கள் 24மணிநேரமும் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து நேற்று மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்கங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை இன்று முதல் 24மணி நேரமும் செயல்படலாம். மதுக்கடைகள், மது விடுதி ஆகியவற்றுக்கு இந்த விதி பொருந்தாது.

source :   dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்