மீண்டும் அதிகரித்து தங்கம் விலை…சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனை.!

Gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (02. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து ரூ.80.30க்கும், கிலோ வெள்ளி ரூ.80,300க்கும் விற்பனையாகிறது.

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.! அடுத்தடுத்த நிகழ்வுகள்…

சென்னையில் நேற்று (01. 01. 2024) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 5,910 ரூபாய்க்கும், சவரன் 47,280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும், வெள்ளியின் விலையிலும் மாற்றமின்றி 30 காசுகள் அதிகரித்து 80 ரூபாய்க்கும், கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்