கீரை வகை என்றாலே அதில் சத்துக்கள் அதிகமாக தான் இருக்கும். எல்லா கீரைகளும் சத்துக்களை கொண்டதாகவே உள்ளது. நாம் நிறைய கீரை வகைகளை பார்த்திருப்போம், உணவாக சமைத்தும் சாப்பிட்டு இருப்போம்.
இப்பொது வெந்தய கீரையின் பயன்களை பார்க்கலாம்.
வெந்தய கீரை சாப்பிட்டால் தலை சுற்றல், பசியின்மையை போக்குகிறது.
இடுப்பு வலி உள்ளவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வகை வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
தொண்டைப்புண், வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாகும்.
மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு இந்த கீரை ஒரு சிறந்த மருந்தாகதிதிகழ்கிறது.
இந்த கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.