unknown node
சென்னை:பல விமர்சன்ங்களில் சிக்கி வரும் நடிகர் எஸ்வி சேகர், தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதை முடக்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைதான் எனவும், நாட்டின் பிற சிறைகளில் உள்ளவர்கள் தங்களை பெங்களூர் சிறைக்கு மாற்றுமாறு கோரி வருவதாகவும் கிண்டலடித்தார்.