முருங்கை மரம் அதிகமாக அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய மரம் தான். இதில் உள்ள அணைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுக்கிறது. இதில் உள்ள அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இந்த மரத்தில் அதிகமான இரும்பு சத்து உள்ளது.
சத்துக்கள் :
முருங்கையில் புரதம், கொழுப்பு, நார்சத்து, கார்போஹைட்ரேட் , இரும்பு, தாது, உலோகம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது.
unknown nodeபயன்கள் :
இது உடல் வலிமையை கொடுக்க வல்லது.
முருங்கைப்பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் சரியாகும்.
இது சிறுநீரை பெருக்க கூடிய சக்தி கொண்டது.
இது ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் இரத்தம் ஊறுவதற்கு உதவி செய்கிறது.
நரம்புகளுக்கு பெலன் அளிக்கிறது.
வயிற்று புண், வாய் புண்களுக்கு முருங்கை காய் ஒரு நல்ல மருந்து.
கண் நோய்களை நீக்குகிறது.
மலச்சிக்கலை நீக்குகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.