ஆபிரகாம் லிங்கன் கண்டகனவு.
ஆபிரகாம் லிங்கன் என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, செருப்பு தைக்கும் தொழிலாளியான அவரது அப்பா தான். இவருடைய மகனாக இருந்து பல இன்னல்களுக்கு மத்தியில் தனது வாழ்க்கையில் உயர்வை கண்டவர்.
unknown nodeஇன்று நாம் இந்த பதிவில் ஆபிரகாம் லிங்கனின் கனவை பற்றி பார்ப்போம். கனவுகளின் நாயனாக விளங்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஆனால், தான் கண்ட கனவு தனது உயிரை காவு வாங்கும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை.
இவரது கனவு உலக புகழ்பெற்ற கனவுகளில் ஒன்றாக தான் உள்ளது. தான் எவ்வாறு சாவார்கள் என்று யாராவது தங்களின் கனவில் கண்டதுண்டா? ஆனால், ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில், அது நடந்தது.
உயிரை காவு வாங்கிய கனவு
அமெரிக்காவின் 16வது குடியரசு தலைவர் தான் கொலை செய்யப்பட்டு இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக தான் கண் கனவு பற்றி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ” ஒரு 10 நாட்களுக்கு முன், நான் மிகவும் சோர்வாகவும், தாமதமாகவும் வீடு திரும்பினேன்.
ஆனால் நான் விரைவாக முடித்து அனுப்ப வேண்டிய முக்கியமான வேலைகள் எனக்கிருந்தது. நான் சோர்வாக இருந்தாலும் கூட, படுத்தால் என்னால் நீண்ட நேரம் உறங்க முடியாது. ஆனால் நான் அரை தூக்கத்தில் இருந்ததால் உடனே தூங்கி விட்டேன்.
unknown nodeதூங்கி கொண்டிருந்த எனக்கு என்னை குறித்த ஒரு கனவு வந்தது. நான் இறந்துவிட்டது போல் ஓர் ஆழ்ந்த மெளனம் அங்கு நிலவியது. அந்த இடத்தில், மனதிற்குள் ஆழத்தையும், மற்றும் ஏராளமான மக்கள் கதறி முழுவதையும் என்னால் நாம் பார்த்தேன்.
பின் நான் என் படுக்கையை விட்டு கீழே இறங்கி தரைத்தளத்தில் உலாவிக் கொண்டிருந்தேன் என்று நான் நினைத்தேன். அங்கு பார்த்தாலும் அனைவரும் துக்க முகத்துடன் அழுதுகொண்டிருந்தனர். ஆனால்,அங்கு அழுது துக்கப்படுபவர்களை என் கண்ணால் காண முடியவில்லை.
பின் நான் ஒவொரு அறையாக சென்று பார்த்துக் கொண்டே வருகிறேன். அங்கு உயிரோடிருக்கும் யாரையும் என் கண்ணால் காண இயலுவதில்லை. அங்கு பார்த்தல், அங்கு மெளனமும், விம்மல் சத்தமும், அழுகையும் எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.
unknown nodeதூக்கப்படுபவர்கள் எல்லாம் அவர்களின் இருதயம் உடைந்து அழுவதை என்னால் காணமுடிகிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் நான் பார்த்து அதிர்ந்து போனேன். இது என்ன? இதெற்கெல்லாம் என்ன அர்த்தம் ? நான் இதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால், மர்மமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
நான் கிழக்கு பக்க அறைக்குள் நுழைந்தேன் அங்கு நடந்த சம்பவங்கள் என்னை பயத்தில் உறைய வைத்தது. நான் மிகவும் பயந்தும், மிரண்டும் போனேன். என் முன்னால் ஒரு சைவம் படுக்க வைக்கும் பாடை இருந்தது. அதில் ஒரு பிணமும் கூட இருந்தது. அதை பார்த்ததும் நான் மிகவும் பயந்து போனேன்.
unknown nodeஅந்த பாடைக்கு இறுதி சடங்கிற்கான அனைத்து அலங்காரங்களும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பிணத்தை சுற்றி ஏராளமான இராணுவ வீரர்கள், சிறிதும் அசையாமல் பாதுகாத்து நின்றனர். மக்கள் கூட்டம் அங்குதிரண்டு நின்றது. ஏராளமான மக்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர்.
ஆனால்,அந்த பிணத்தை முகத்தை மூடி வைத்திருந்தனர். அந்த பிணத்தின் முகம் யாரென்று தெரியவில்லை. நான் அங்கே இருந்த இராணுவ வீரர்களில் ஒருவரை பார்த்து, ” இந்த வெள்ளை மாளிகையில், யார் இறந்து போய்விட்டார்கள்? ” என்று கேட்டேன்.
unknown nodeஅதற்கு அவர் ‘ ஜனாதிபதி ‘ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். பின் ஒரு கொலைகாரன் அவரை கொலை செய்து விட்டார் என்று கூறியுள்ளார். பின் கூடியிருந்த மக்கள் மத்தியில், வேதனையில் கதறல்கள் வெடித்தன.அந்த கதறல் சத்தத்தில் நான் திடுக்கிட்டு விழித்துவிட்டேன்.
நான் கண்டவை அனைத்தும் கனவு தான் என்றாலும், என் அமைதியாக இருக்கவில்லை என்று தனது நபர்களிடம் தான் கண்டா கனவை பகிர்ந்துள்ளார்.
தான் கண்ட கனவினை மனைவியிடம் பகிர்ந்த லிங்கன்
இவர் கனவு கண்ட அன்றே ஆபிரஹாம் லிங்கன் தனது மனைவியிடம் இதனை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்படும் தினத்தன்று கூட தனது மெய்காப்பாளன் குரூக்கிடம் தான் கொலை செய்யப்பட்டதாக கண்ட கனவினை கூறியுள்ளார்.
unknown nodeஇதனையடுத்து, ஆபிரஹாம் லிங்கன் அந்த திரையரங்கிற்கு செல்வதை தொடுத்துள்ளார். இருப்பினும், அவரது மனைவியிடம் நாடகம் பார்க்க அழைத்து போவதாக கூறியிருந்தால் முன்னிட்டே அங்கு செல்ல வேண்டும் என குரூக்கிடம் கூறியுள்ளார்.
கனவு காட்டிய பாதை
unknown nodeஅவர் திரையரங்கிற்குள் நுழையும் முன், அவர் மெய்க்காப்பாளர் குரூக்கிடம் திரும்பி, ” கூடப்பியர் ‘good bye crook ‘ என்று கூறி உள்ளார். இதனை கேட்ட குரூக் அதிர்ந்து போயுள்ளார். ஏனென்றால் ஆபிரகாம் லிங்கன் எப்போதும் good night crook என்று தான் கூறுவாராம். அவரது இறுதி நினைவாக இப்படி சொன்னதாக மெய்காப்பாளன் கூறியுள்ளார்.
கனவு நனவானது
unknown nodeபின் இவர், கண்டா கனவின்படியே, கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென்னக ஆதரவாளர் ஜான் வில்ஸ பூத் என்ற அமெரிக்க நடிக்கிறாள் ஆபிரகாம் லிங்கன் சுட்டு கொல்லப்பட்டார்.