unknown node
மத்திய பிரதேசத்தில் டாமோ மாவட்டத்தில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவர் சாத்விக் பாண்டே. இவரை சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மாணவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது ரயில்வே டிராக்கில் மாணவர் ஒருவர் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தது சாத்விக் பாண்டே என உறுதி செய்யப்பட்டது. ப்ளூவேல் விளையாட்டால் சாத்விக் பாண்டே ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.