unknown node
கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் பெறப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இனிமேல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் ‘டிஜிட்டல்’ முறையை மட்டுமே பின்பற்றி செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் உள்பட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.