unknown node
மதுரை : மத்திய அரசின் மாடு விற்பனை சட்டத்திற்கு எதிரான தடை மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் ஆகியோர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.