இசுலாமாபாத், ஆக.2 ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.இதையடுத்து, பிரதமர் பதவிய்லிருந்து நவாஸ் ஷெரீஃப் வேறு வழியின்றி விலகினார். இதையடுத்து பாகிஸ்தானின் பிரதமராக ஷாஹித் அபாசி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் முசுலிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமராக ஷாஹித் அபாசி தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 221 வாக்குகள் பெற்று பாகிஸ்தான் பிரதமராக ஷாஹித் அபாசி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் 18 ஆவது பிரதமர் ஷாஹித் அபாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் புதிய பிரதமர் இவரா!!!!!
இசுலாமாபாத், ஆக.2 ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.இதையடுத்து,
unknown node