unknown node
ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள அதி பயங்கர ஹட்டோ புயலால் அந்த நகரை உருக்குலைந்துள்ளது, இது வரை ஹட்டோ புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு நகரை உருக்குலைய வைத்துள்ள ஹட்டோ புயலால் ஹாங்காங்கின் மக்காவ் நகரில் பல்வேறு வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. இதே போன்று கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.