இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!

Default Image

இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-வது ஆண்டு நினைவு தினம். 

செல்வி ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயராம்-வேதவல்லி. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார். செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன்னாள் தமிழக முதலமைச்சரும், அரசியல் தலைவரும், பிரபல தென்னிந்திய நடிகையும் ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 120-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

செல்வி ஜெயலலிதா அவர்கள், டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரண செய்தி தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்க செய்தது. அதிமுகவின் பொது செயலாளராக 6 முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பெண் ஆளுமையாக தான் செயல்பட்டார். எனவே தான் இவரை தமிழகமே ‘அம்மா’ என்று அழைக்கின்றது.

தன் திறமையான ஆளுமையாலும், தைரியமிக்க செயலாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள், டிச.5ம் தேதி தனது உலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்