வரலாற்றில் இன்று(25.02.2022)..!பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்..!

Default Image

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை, முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி.சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர், லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும் கற்றுக்கொண்டார். பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார்.

இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை வெளிப்படுத்தினார். கர்நாடக இசையில் சிறப்புற்றதப் விளைவாக இவருக்கு பால அங்கிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவைகளில், இவர் பாடல்களை எழுதி அதற்கு கதம்பம் எனப் பெயரிடப்பட்டு வெளியானது.

2004 இல் சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சங்கீத சூடாமணி விருது, 2006 இல் கலைமாமணி விருது, மியூசிக் அகாதெமி, சென்னை வாக்கேயக்காரர் விருது, 2010 இல் சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இத்தகைய பல்வேறு பட்டங்களை பெற்ற இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கந்த 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார். இவர் மறைந்தாலும் இவரின் நினைவுகள் நம்மை விட்டு அகலாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்