இந்தோனேசியாவில் அதி பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாளி தீவு அருகே சற்று முன் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

EQ Japan

இந்தோனேசியாவின் பாளி தீவு அருகே சற்று முன் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1:25 மணிக்கு கடலுக்கு அடியில் 518கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

நில அதிர்வு தரவுகளின் அடிப்படையில், நிலநடுக்கம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும்,  மையப்பகுதியின் பகுதியில் லேசான அதிர்வு  உணரப்பட்டிருக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.