கணக்கில் வராத ரூ.120 கோடி: பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை.!

Default Image

கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் உள்ள 28 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த வருமானவரித்துறை சோதனையில், கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனையில், 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்