#Paralympics: பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று ஜப்பானுக்கு புறப்படும் இந்திய வீரர்கள்!!

Following the Tokyo Olympics, Indian athletes leave for Japan today to compete in the Paralympics.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து, பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று ஜப்பான் செல்கிறது.

ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, ஜப்பானின் டோக்கியோவில் கோடைகால பாராலிம்பிக்கில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளது.  டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் 25-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டமபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

9 விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவிற்கு 54 பேர் இதில் பங்கேற்கின்றனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று ஜப்பான் புறப்பட உள்ளனர்.

இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லுபவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் பரிசளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது போல, வரவிருக்கும் பாரா ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.