நாடாளுமன்ற கூட்டத்தின் மக்களவை இன்று மீண்டும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிவருவதால் மக்களவை பிற்பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டு, பிரதமர் மோடி இது தொடர்பாக இரு அவைகளிலும் பேசவேண்டும் என கூறி வருகின்றனர்.
