முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் உயர்வு..!

Today the farm purchase of eggs in Namakkal region is being sold for 4.80 rupees without change

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4.80காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, கூட்டத்தில் மற்ற மண்டலங்களில் முட்டையின் விலை தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும் வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பதன் காரணம் காரணமாக முட்டை விலை மேலும் 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்ந்து 4.80 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களில் மட்டும் 80 காசுகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.