ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த விற்பனை காட்டும் ஓப்போ...அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை... சகல வசதிகளுடன் சந்தையில் இறங்கப்போகிறது...

ஸ்மார்ட் போன் விற்பனையில் மாஸ் காட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது  ரெனோ 3 ப்ரோ என்ற புதிய மாடல்  ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் மாதம்  2-ம் தேதி அறிமுகம்

ஸ்மார்ட் போன் விற்பனையில் மாஸ் காட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது  ரெனோ 3 ப்ரோ என்ற புதிய மாடல்  ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் மாதம்  2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதள பக்கங்களில் வெளியானது. இது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் டீசரில் புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன்

44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது  தற்போது உறுதியாகி உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில்

6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே,

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,

8 ஜி.பி. ரேம்,

128 ஜி.பி. மெமரி,

12 ஜி.பி. ரேம்,

256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒ.எஸ். 7 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 48 எம்.பி.

பிரைமரி கேமரா, 13 எம்.பி. சென்சார், 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.