ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 2 மாதங்களுக்குள் புதிய டிஜிட்டல் தளம் (DCA) ஒன்றை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
unknown nodeTRAI [Image source : Exchange4media]
அதாவது, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிசிஏ-வை முன்னுரிமையாக உருவாக்கி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
unknown nodeTRAI [Image source : Namasthe Telangana]
கடந்த மார்ச் மாதத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்ட், TRAI ஆல் ஆராய்ச்சி செய்யப்படும் தொழில்நுட்பங்களின் நீண்ட பட்டியலில் DCA வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்தது. பின்னர், மே மாத இறுதியில் சோதனை அடிப்படையில் இது முதலில் வெளியிடப்படும் என்று TRAI அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
unknown nodeTRAI [Image source : Google Play]
வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெரும் முறை:
அதன்படி, முதல் கட்டமாக, சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைப் கட்டுப்படுத்துவதற்கான தங்கள் ஒப்புதலைப் பதிவுசெய்யும் செயல்முறையைத் தொடங்க முடியும். பின்னர், வணிக நிறுவனங்கள் விளம்பரச் செய்திகளைப் பெற வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெற அவர்களை அணுக முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்தியா (டிராய்) நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DCA என்றால் என்ன?
வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள விரும்பும் பிராண்டுகள் அல்லது நிறுவனங்களுகளின் ஒப்புதலைப் பெற உதவும். டிஜிட்டல் லெட்ஜர் பிளாட்ஃபார்ம் (DLT) தளங்களில் நுகர்வோர் ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையையும் DCA கண்காணிக்கும். புதிய DCA வசதிகள் DLT-களில் ஒப்புதல் அறிக்கையை விரைவாக சேகரிக்க உதவும்.‘
DLT என்றால் என்ன?
இயங்கு தளங்கள் (Operating System) தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நடத்தப்படும் அனுப்புநர் ஐடிகள் மற்றும் டெம்ப்ளேட்களின் பதிவை வைத்து நிர்வகிப்பதற்கான டிஜிட்டல் அமைப்புகளாகும். வணிகங்கள் தொடர்புடைய விவரங்களை DLT-களில் பதிவு செய்ய வேண்டும்.
unknown nodeTRAI [Image source : The Live Nagpur]
டிராய் அறிவுரை:
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சம்மதத்தின் நோக்கம் மற்றும் பிராண்ட் பெயர் ஆகியவை குறுகிய குறியீடு மூலம் அனுப்பப்படும் ஒப்புதல் கோரும் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கிய அணுகல் வழங்குநர்கள், ஒப்புதல் கோரும் செய்திகளை அனுப்ப 127 இல் தொடங்கும் பொதுவான சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள அமைப்பின் கீழ், வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போன்ற பல்வேறு முக்கிய நிறுவனங்களால் ஒப்புதல் பெறப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், அணுகல் வழங்குநர்கள் (APs) என வகைப்படுத்தப்பட்டதால், ஒப்புதலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஒப்புதல் வழங்கவோ அல்லது திரும்பப் பெறவோ ஒருங்கிணைந்த அமைப்பு எதுவும் இல்லை.
