விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதைய விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி […]
மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே என பார்த்திபன் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தேர்தல் ஆணைய தகவல்களின்படி, திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன. வருகின்ற 7-ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக […]
கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என திருமாவளவன் தெரிவித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக ,பாமக கட்சிகள் தோல்வியை தழுவின. சனாதன சக்திகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். சமூகநீதியை காப்பாற்றுவதில், மாநில உரிமைகளை காப்பாற்றுவதில் முழுவீழ்ச்சில் மு.க ஸ்டாலின் பணியாற்றுவார். […]
தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன்காரணமாக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகின்ற 7-ஆம் தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், திமுக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும், […]
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் மு.க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக முக ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் […]
திமுக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியை 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்கிறார். நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் முறைப்படி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக […]
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். முன்னாள் முதல்வர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லம் சென்று தாயிடம் வாழ்த்து பெற்றதையடுத்து அறிவாலயம் சென்றார் மு க ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு […]
விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளராக பழனியப்பனை விட 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், திமுக 159 தொகுதிகளிலும், அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் முதல்வராகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, […]
தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக்கொடுத்த […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்றார். அதிமுக […]
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் ஈபிஎஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலையில், ஈபிஎஸ் 1,60, 730 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 87, 874 வாக்குகள் பெற்றனர். இறுதியாக திமுக வேட்பாளர் சம்பத்குமார் விட 75,856 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டார். […]
ஆலங்குளம் தொகுதியில் 3,429 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், திமுக வேட்பாளர் பூங்கோதை 70,614 வாக்குகளும் பெற்றனர். இறுதியாக 3,429 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் […]
கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ , அமமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கடம்பூர் […]
தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார் வாழ்த்துகிறேன் என ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வராகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் என பலரும் […]
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் என். அசோக்குமார் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பல இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பேராவூரணி தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.வி. திருஞானசம்பந்தமும், திமுக சார்பில் என். அசோக்குமாரும் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் எஸ்.வி. திருஞானசம்பந்தத்தை விட 23,000 வாக்குகள் அதிகம் பெற்று என். அசோக்குமார் வெற்றி பெற்றார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி .அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி!#TNElections2021 | #TNAssemblyElection2021 | #DMK | #மக்கள்தீர்ப்பு2021 pic.twitter.com/jdhmdBfFfM — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 2, 2021
சென்னை மண்டலத்தில் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இன்று காலை 8 மணி முதல் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 146 இடங்களில் திமுக கூட்டணியும், 87 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் […]