உக்ரைனின் மீது ரஷ்யப்படைகள் மீண்டும் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யப்படைகள் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகளை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய உக்ரைனில் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கிய்வ் மற்றும் கார்கிவ் ஆகியவற்றில் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தடைபட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், தங்குவதற்காக ஆழமான சுரங்கப்பாதை நிலையங்களை தேடி விரைந்தனர். […]