திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் …, ரன்பீர் கபூர் -ஆலியா பட்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர் … Read more

திருமணத்திற்காக காதலனிடம் 11.5 லட்சம் கொடுத்துவைத்த பெண் – மொத்தமாக சுருட்டிவிட்டு கிளம்பிய காதலன்!

திருமணத்திற்காக காதலனிடம் 11.5 லட்சம் காதலி கொடுத்துவைக்க, மொத்தமாக சுருட்டிவிட்டு ஊருக்கு கிளம்பிய காதலன் காதலன் மீது புகார் கொடுத்துள்ள காதலி. பீகாரை சேர்ந்த 31 வயதுடைய இந்திரன் தத்தா என்பவர் மேற்கு வங்காளத்தில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூர் சென்றிருந்த பொழுது பெண் ஒருவரை சந்தித்து இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரி பருவம் முதல் ஒன்றாக ஊர் சுற்றி பல வருடம் காதலித்து வந்துள்ளனர். தத்தா என்னும் அந்த ஆண் தான் … Read more

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்… சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து பிரித்து வைத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!

வீட்டை விட்டு ஓடிய காதலர்களை சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து பிரித்து வைத்ததால் அந்த பெண் தற்கொலை செய்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி எனும் பகுதியில் உள்ள கக்கன்ஜி நகரில் வசித்து வரக்கூடிய முத்து -பழனிஅம்மாள் ஆகியோரின் 20 வயது மகள் தான் முத்து பாண்டியம்மாள். முத்துபாண்டியம்மாள் படிக்கும் கல்லூரியில் ஒன்றாக பயின்று வந்த கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த பெண் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் முத்துகிருஷ்ணன் வீட்டில் … Read more

ஆண்களே!உங்களுக்கு பிடிச்ச பெண்ணை காதலிக்கணுமா அப்போ வாங்க!

காதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். இதில் ஆண்களுக்கு தங்களுடன் நெருக்கமாக பழகும் பெண்களை காதலிக்க விரும்புவார்கள் அதை பற்றி பார்ப்போம். உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து … Read more

ஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள்.! திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.! பீச்சில் நடந்த கொடூரம்.!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள்.  இருவரும் பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியவரை புலனாய்வு அதிகாரி மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் … Read more

காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் … Read more

மாப்பிள்ளையை ஏமாற்றி காதலனுடன் கைகோர்த்த மணப்பெண்..!

சென்னை மாயவரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் மோனிகா (20). இவருக்கும் உறவினரான மனோஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் ,மோனிகா கடந்த 15-ம் தேதி தன் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால்  மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த மகேஷ் மோனிகாவிற்கு போன் செய்து பார்த்த போது போன்  சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் மகேஷ் மோனிகாவின் நண்பர்களுக்கும் போன் செய்தும் , … Read more

காதல் ஜோடிகள் கரண்ட் ஷாக்கால் தற்கொலை…!!!

ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.ஜோதியுடன் சுரேஷ்க்கு உள்ள தொடர்பு குறித்து சிலர் மாரியம்மாளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியம்மாள் சுரேசை கண்டித்து உள்ளார். இருப்பினும் ஜோதியை சந்திப்பதை சுரேஷ் கைவிடவில்லை. இதனால் மாரியம்மாளுக்கும் சுரேஷ்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுரேசிடம் கோபித்துக்கொண்டு … Read more

காதல் திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு!

மதுரை மாவட்டம் கிளசந்தை பேட்டையை சேர்ந்த பொன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பொன்ராஜ் மீனாவின் தூரத்து உறவினர் என கூறப்படுகிறது. பொன்ராஜ் மீனாவின் வீட்டில் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்தனர். மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்று திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த மீனாவின் அடைந்த சகோதரர்கள் இருவர் அவர்கள் நண்பர்களுடன் … Read more