கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, வாகனத்தை பராமரிப்பது குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியதாவது: தலைநகர் பெங்களூருவில் இருந்து மும்பை, கோவா, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் கேஎஸ்ஆர்டிசி விரைவு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஓட்டுநர் திடீரென […]